Tuesday, June 23, 2015

கமல், ஷங்கர், மணிரத்னம் ஆகியோரின் நற்செயல்.



சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை கமல், மணிரத்னம், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயுவிற்கு மானியமாக 40 ஆயிரம் கோடியை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது. இந்த செலவு மத்திய அரசுக்கு பெரும் சுமையாகவே இருக்கிறது. எனவே வசதி படைத்தவர்கள் தங்களுக்கான மானியத்தை விட்டுத் தருமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. 

இதைத் தொடர்ந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கான சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என்று அறிவித்துள்ளனராம். இதைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களான கமல்ஹாசன், பிரபு, இயக்குநர் மணிரத்னம், சின்மயி, பாடகர் ஜேசுதாஸ், அவரது மகனாக விஜய் ஜேசுதாஸ், புனிதா பிரபு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு கேஸ் எரிவாயுவிற்கான மானியம் தேவையில்லை என்று அறிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

No comments:

Post a Comment