Wednesday, June 24, 2015

இயக்குனர் மீதுகடும் கோவமாய் இருக்கிறார் நயன்தாரா,


கடந்த சில மாதங்களாகவே ஹீரோயின்கள் திக் திக்கென்று பயத்திலேயே இருக்கிறார்கள். இணைய தளத்தில் எப்போது தங்களைபற்றி அவதூறான வீடியோ வரும், அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் பயத்துக்கு காரணமாம். ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் வெளியானது. அதுபற்றி கொஞ்சமும் கவலைப்பாடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடித்து வருகிறார். ஹன்சிகா, லட்சுமி மேனன் என டாப் ஹீரோயின்கள் பெயரில் குளியல் காட்சி வீடியோக்கள் வெளியானதுஇதையறிந்து வருத்தம் அடைந்தபோதும் வெளிப்படையாக அதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.முன்னதாக காதல் உறவில் இருந்தபோது பிரபுதேவா, சிம்புவுடன் ெநருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியானதில் அப் செட் ஆகியிருந்தார் நயன்தாரா. சமீபமாக நயன் தாராவுக்கும் அவர் நடிக்கும் நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விக்னேஷை கட்டி பிடித்தபடி நயன்தாரா நிற்கும் ஸ்டில் வெளியானது. தனிப்பட்ட முறையில் விக்னேஷ் எடுத்த செல்ஃபி படம் எப்படி இணைய தளத்தில் வெளியானது என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பதுடன் விக்னேஷ்தான் அதை வெளியிட்டு இருப்பார் என அவர் மீது கோபத்திலும் இருக்கிறாராம் நயன்தாரா.



No comments:

Post a Comment