Monday, June 29, 2015

ஓய்வை உறுதி செய்தார் சங்கக்காரா


இலங்கை வீரர் சங்கக்காரா(37) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய் துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: ஓய்வை அறிவிக்க இதுவே சரியான தருணம். உலகக் கோப்பை முடிந்தவுடன் ஓய்வு பெற விரும்பினேன். ஆனால், தேர்வுக் குழுவினர் கேட்டுக் கொண்டதால் தொடர்ந்தேன்.
நான்கு டெஸ்ட்களில் விளை யாட ஒப்புக் கொண்டேன். அந்த ஒப்பந்தத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும். எனவே, விலகுகிறேன். சாதனைகளுக்காக நீண்ட நாள் விளையாட விரும்ப வில்லை. தனிப்பட்ட சாதனை களுக்காக மட்டுமே விளையாட விரும்ப வில்லை. இது ஓய்வு பெறுவதற்கான தருணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
132-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சங்கக்காரா 12,305 ரன்கள் குவித்துள்ளார். 38 சதங்களை விளாசியுள்ளார். தற்போது விளையாடி வருபவர் களிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர் இவர்தான்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் 15,921 என்ற சாதனையும், அதிக சதம் (51) என்ற சாதனையும் சச்சின் வசம் உள்ளது.

No comments:

Post a Comment