Thursday, June 18, 2015

இசைதளபதியாக மாறி வரும் இளையதளபதி...


இளையதளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு நல்ல பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஒரு சிறந்த பாடகி என்பதால் பாடும் திறன் விஜய்யின் ரத்தத்திலேயே ஊறிய ஒன்றாக கருதப்படுகிறது.

விஜய் கடந்த 1994ஆம் ஆண்டில் முதன்முதலாக 'ரசிகன்' என்ற படத்தில்தான் 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி' என்ற பாடலை பாடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஒரு பாடலை பாடும் வழக்கத்தை கொண்டுள்ளார். இந்த வழக்கம் கடைசியாக வெளிவந்த 'கத்தி' படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 

No comments:

Post a Comment