Friday, June 26, 2015

கமல் படத்தால் அருள்நிதிக்கு வந்த சிக்கல்


அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம்நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. அதன்படி, இப்படத்தை வருகிற ஜூலை 3-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், கமல் நடிப்பில் உருவாகியுள்ளபாபநாசம்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்தது. ஆடியோ வெளியீட்டுக்கு பிறகு இப்படத்தை ஜூலை 3-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். அன்றைய தினத்தில் மேலும் சில படங்களும் வெளிவருகின்றன.

இதனால், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்படத்தின் ரீலீஸ் தேதியை இப்படத்தை வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து ஜே.எஸ்.கே நிறுவனத்தின் நிர்வாகி சதீஷ்குமார் கூறும்போது, எங்கள் நிறுவனம் சார்பாக ஜூலை 3-ம் தேதி வெளியாக இருந்தநாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்திரைப்படம் தற்போது உலக நாயகன் கமல் நடித்த ‘‘பாபநாசம்திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால், எங்களது விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூலை 31-ந் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment