Monday, June 15, 2015

குமார் சங்­கக்­கார இன்னும் ஒரு இரட்டைச் சதம் பெற்றால்




குமார் சங்­கக்­கார இன்னும் ஒரு இரட்டைச் சதம் பெற்றால், அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்­பவான் டொன் பிராட்­மனின் சாத­னையை முறி­ய­டித்­த­வ­ராக சாதனை படைப்பார்.
லங்கை கிரிக்கெட் அணியை உல­க­ளவில் தலை நிமிர வைத்­த­வர்­களில் மிக­முக்­கி­ய­மா­னவர் சங்­கக்­கார என்றால் அது மிகை­யா­காது. அந்த அணிக்­காக நீண்ட நாட்­க­ளாக விளை­யாடி வரும் அவர், இந்­தி­யா­விற்கு எதி­ரான முதல் டெஸ்ட் போட்­டி­யுடன் விடை பெற வாய்ப்­புள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ஏற்­க­னவே இலங்கை கிரிக்கெட் சபை­யிடம் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டு டெஸ்­ட் போட்டிகளிலும், இந்­தி­யா­விற்கு எதி­ரான முதல் டெஸ்­ட்டிலும் விளை­யாடி விட்டு ஓய்வு பெறு­வ­தாக சங்­கக்­கார தெரி­வித்­துள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை கூடு­கி­றது. அப்­போது இது­கு­றித்து இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­க­ப்ப­டு­கி­றது.
சர்­வ­தேச போட்­டியில் இருந்து ஓய்வு பெற்­ற­வுடன் கவுண்ட்டி அணி­யான சர்ரே அணியில் விளை­யா­டு­வ­தற்­காக இவர் ஒப்­பந்­த­மா­கி­யுள்ளார். 37 வய­தாகும் குமார் சங்­கக்­கார இது­வரை 130 டெஸ்ட் போட்­டி­களில் 12203 ஓட்­டங்­களைக் குவித்­துள்ளார்.
அதிக ஓட்­டங்கள் குவித்த இலங்கை வீரர்கள் பட்­டி­யலில் முதல் இடத்­திலும், சர்­வ­தேச அளவில் 5-ஆவது இடத்­திலும் உள்ளார். 38 சதங்­களும் பெற்றுள்ளார். 11 இரட்டை சதங்கள் பெற்றுள்ள அவர் இன்னும் ஒரு இரட்டை சதம் பெற்றால் பிராட்மனின் சாதனையை முறியடிப்பார்.

No comments:

Post a Comment