Monday, June 15, 2015

ஏ.ஆர்.ரகுமானை அடுத்து அனிருத்..






தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அந்த படத்தில் இவர் இசையமைத்தகொலவெறிபாடல் உலகமெங்கும் பட்டையை கிளப்பியது. அதைத் தொடர்ந்து அனிருத் இசையமைத்த அனைத்து பாடல்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன

அதன்பிறகு, பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பும் இவரை தானாகவே தேடி வந்தது. இளம் வயதிலேயே மிகப்பெரிய இடத்தை அடைந்துவிட்ட அனிருத், சமூக வலைதளமான டுவிட்டரில், தன் பெயரில் சொந்தமாக பக்கம் ஒன்றை நிறுவி, அதில் தான் இசையமைக்கும் படம், ஆல்பம் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இவருடைய பக்கத்தில் பல்வேறு ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது, இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேரை தொட்டுள்ளது.

டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையில் 10 லட்சம் பேரைத்தொட்ட இசையமைப்பாளர்களில் இரண்டாவது இடத்தை அனிருத் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக இச்சாதனையை படைத்த இசைப்புயல் .ஆர்.ரகுமானை தற்போது 78 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment