Sunday, June 14, 2015

சீயான் விக்ரமை வருத்தத்துக்குள்ளாக்கிய விடயம்!


.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படம் இன்னும் முடிந்த பாடில்லை. ஆனால் அதற்குள் விக்ரம் கிட்டத்தட்ட 2 கதைகளை ஓகே செய்துள்ளார்.
அப்படி அவர் ஓகே செய்த முதல் கதை அரிமா நம்பி படத்தை எடுத்த இயக்குனர்ஆனந்த் ஷங்கர் சொன்ன கதை. இக்கதையை பட ஷூட்டிங்நடக்கும் போதே அவர் கூறினாராம்.10 என்றதுக்குள்ளே முடிந்தவுடன் இப்படத்தை தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்காக விக்ரம் தாடிவளர்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்தப்படத்தை முதலில் தயாரிப்பாளர் தாணுவின் சகோதரர் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் விக்ரம் இந்த படத்தைஐங்கரன்நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாராம்.
கதை உருவாக்கம் தொடங்கி எல்லாவிசயங்களிலும் தாணுவின் சகோதரரே ஈடுபட்டிருந்ததால், அவரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டுத்தான் ஐங்கரன் நிறுவனத்துக்கு படம் கைமாறியது என்றார்கள்.
அதன்பின்னர், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20ம் தேதி வாக்கில் தொடங்குவதாகச் சொல்லப்பட்டது.
படப்பிடிப்புக்கு முன்பான வேலைகள் நடக்காததால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. எதோ ஒரு காரணத்தால் இன்னும் தொடங்கமலே போகிறது.

பத்து எண்றதுக்குள்ள படமும் திட்டமிட்டபடி நடக்காமல் இழுக்கிறது, அடுத்துத் தொடங்கவேண்டிய படமும் தாமதமாகிக்கொண்டே போகிறது, நம் விசயத்தில் இவ்வளவு குழப்பங்களா? என்று விக்ரம் வேதனையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்து பெரும் புள்ளிகள்.

No comments:

Post a Comment