Sunday, June 14, 2015

விஜய் குறித்து வைரமுத்து புகழாரம்


இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தின் பாடல்கள் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து மனம் திறந்து ஒருசில கருத்துக்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய்யின் இசையறிவு குறித்து வைரமுத்து கூறியபோது, "விஜய் ஒரு சிறந்த இசை ரசிகர். ஆனால் வெளியில் இருந்து பார்த்தால் அவர் இசையை ரசிப்பது போல் தெரியாது. ஆனால் உண்மையில் அவர் மிகுந்த இசையார்வர் உள்ளவர். அதுமட்டுமின்றி பாடல்களின் ஒவ்வொரு வரிகளையும் ரசிப்பவர். புலி படத்திற்காக நான் எழுதிய பாடலை அவர் வாசித்தும், பாடியும் ரசித்தார்

இந்த படத்தில் நான் எழுதிய பாடல்களில் கருத்தும், இலக்கியமும், அடித்தட்டு மக்களின் உணர்வும் கலந்து இருக்கும். இந்த படத்தின் ஆறு பாடல்களும் விஜய்க்கு பெரிய வெற்றி பாடல்களாக அமையும் என்று நான் நம்புகிறேன். மேலும் புலி படத்தின் பாடல்கள் குறித்து சொல்ல நிறைய இருப்பினும், படம் வெளியாகும் முன்பே அதுகுறித்து பேசுவது நாகரீகமாக இருக்காது என்பதால் இத்துடன் முடித்துக்கொள்வதாகவும் வைரமுத்து கூறியுள்ளார்.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப் மற்றும் பலர் நடித்துள்ள புலி படத்திற்கு தேவிஸ்ரீ இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இயக்கி வரும் இந்த படம் செப்டம்பர் 17ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment