Sunday, June 14, 2015

டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் சங்ககரா!


இலங்கை கிரிக்கெட் அணியை உலகளவில் தலை நிமிர வைத்தவர்களில் ஒருவர் சங்ககரா என்றால் அது மிகையாகாது. அந்த அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வரும் அவர், இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விடை பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும், இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டிலும் விளையாடி விட்டு ஓய்வு பெறுவதாக சங்ககரா தெரிவித்துள்ள நிலையில் வரும் செவ்வாக்கிழமை இலங்கை கிரிக்கெட் வாரியம் கூடுகிறது. அப்போது இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கவுண்ட்டி அணியான சுர்ரே அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

37 வயதாகும் சங்ககரா இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் 12203 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும், சர்வதேச அளவில் 5-வது இடத்திலும் உள்ளார். 38 சதங்களும் அடித்துள்ளார். 11 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர் இன்னும் ஒரு இரட்டை சதம் அடித்தால் பிராட்மேன் சாதனையை முறியடிப்பார்.

No comments:

Post a Comment